வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் மதிப்பை குறைவாக காண்பித்து பட்டா வழங்கியிருப்பதாகக் கூறி விஜயலட்சுமி என்பவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.